search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் - பஸ் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலி
    X

    நேபாளம் - பஸ் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் இந்தியர் உட்பட 6 பேர் பலி

    நேபாளம் நாட்டின் நவல்பரசி மாவட்டத்தில் இன்று ஆற்றுக்குள் பஸ் விழுந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். #Indianamongsixkilled #Nepalbusaccident
    காத்மான்டு:

    நேபாளம் நாட்டின் முதலாம் மாகாணத்தில் உள்ள சன்சாரி மாவட்டத்திற்குட்பட்ட இட்டாஹரி நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் பைராஹாவா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மத்யா-பிந்து நகராட்சிக்கு உட்பட்ட சாலை வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் உள்ள அருன் ஆற்றுக்குள் விழுந்தது.

    இந்த விபத்தில் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிதானந்தா யாதவ் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேர் பாரத்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Indianamongsixkilled  #Nepalbusaccident 
    Next Story
    ×