search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை
    X

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை வருகிறது. #AungSanSuuKyi

    யங்கூன்:

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு சொந்தமான அந்த வீடு யங்கூனில் இன்யா ஏரிக்கரையில் உள்ளது. 2 அடுக்கு மாடியை கொண்ட இந்த வீடு தற்போது பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

    இந்த வீட்டின் மீது ஆங் சாங் சூகியின் அண்ணன் ஆங் சாங் ஓ வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் மீது தனக்கும் உரிமை உள்ளது என்றும், அதை ஏலம் விட்டு வரும் பணத்தில் தனக்கு பங்கு தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடு ரூ.670 கோடி விலை போகும் என கணக்கிடப்பட்டுள்ளது. #AungSanSuuKyi

    Next Story
    ×