என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் திறப்பு
Byமாலை மலர்8 Oct 2018 12:42 PM GMT (Updated: 8 Oct 2018 12:42 PM GMT)
உள்நாட்டு தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட பாகிஸ்தான் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. #Pakistanconsulate
காபுல்:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.
இதன் விளைவாக தங்கள் நாட்டின் விவகாரங்களில் அண்டைநாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாகாண கவர்னர் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜலாலாபாத் நகரில் உள்ள துணை தூதகரத்தை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜலாலாபாத் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்த தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanconsulate #Jalalabadconsulate
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.
மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு விசாவுக்காக விண்ணப்பித்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கபடும் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்கர் மாகாண கவர்னர் ஹயாத்துல்லா ஹயாத் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதன் விளைவாக தங்கள் நாட்டின் விவகாரங்களில் அண்டைநாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு மாகாண கவர்னர் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜலாலாபாத் நகரில் உள்ள துணை தூதகரத்தை மூடுமாறு பாகிஸ்தான் அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜலாலாபாத் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று நூற்றுக்கணக்கானவர்கள் இந்த தூதரகத்தில் விசாவுக்காக விண்ணப்பித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanconsulate #Jalalabadconsulate
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X