search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு - அதிபர் மைத்ரிபால சிறிசேனா
    X

    இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு - அதிபர் மைத்ரிபால சிறிசேனா

    இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    கொலும்பு:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்குமான இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

    இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழகளின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். #MaithripalaSirisena #Srilanka
    Next Story
    ×