search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையில் விரைவில் துப்பாக்கி குண்டு பாயும் என்று பேஸ்புக் வலைதளத்தில் மிரட்டல் விடுத்த வாலிபர் 3 மாதத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump
    பென்சில்வேனியா:

    அமெரிக்காவில் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் ‌ஷர்வன் ரிச்சர்ட் கிறிஸ்டி (27). கடந்த ஜூன் மாதம் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக கருத்துகள் வெளியிட்டு இருந்தார்.

    அதில், “உங்கள் (டிரம்ப்) தலையில் துப்பாக்கி குண்டு பாயும், அது விரைவில் நடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.


    அதை தொடர்ந்து பென் சில்வேனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ஒகியோவில் வைத்து இவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ‘380 காலிபர்’ ரக கைத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் அவர் கார்கள் மற்றும் துப்பாக்கிகளை திருடி அமெரிக்க மற்றும் கனடாவில் விற்று வந்தது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பென்சில்வேனியாவில் இருந்து நியூயார்க் மற்றும் கனடா தப்பி சென்றார். அங்கிருந்து அமெரிக்கா திரும்பிய அவர் மேற்கு விர்ஜீனியா, கொனட்க்கு, மேரிலேண்ட் சென்று பின்னர் ஒபியோ வந்து சிக்கி கொண்டார். #USPresident #DonaldTrump
    Next Story
    ×