search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தான்சானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு
    X

    தான்சானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு

    தான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    உகாரா:

    ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் 4 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் 2 பேரை மட்டும் உயிருடன் மீட்டு வந்தனர். படகில் 200 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டனர். இதனால் எடை அதிகரித்து பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    படகு மூழ்கி விபத்துக்கு காரணமாணவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். இன்னும் பலர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது. எனவே அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் ஏரிக்கரையில் காத்து கிடக்கின்றனர். #LakeVictoria  #LakeVictoriaFerryAcciden
    Next Story
    ×