search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள் - மோடி மீது இம்ரான் கான் மறைமுக தாக்கு
    X

    பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள் - மோடி மீது இம்ரான் கான் மறைமுக தாக்கு

    பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதை விமர்சித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், “பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள்” என பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். #IndPakTalks #PMModi #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    மேற்கண்ட இரு சம்பவத்தை அடுத்து, இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இந்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், “இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்” என ட்வீட் செய்துள்ளார்.



    இதில், “பெரிய அலுவலங்களை ஆக்கிரமித்து இருக்கும் சிறிய மனிதர்கள்” என்ற வார்த்தை பதம் மோடியை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது. 
    Next Story
    ×