search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில்நுட்ப கோளாறு - செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் கியூரியாசிட்டி
    X

    தொழில்நுட்ப கோளாறு - செவ்வாயில் இருந்து தகவல் அனுப்ப முடியாத நிலையில் கியூரியாசிட்டி

    செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். #Curiosity #NASA
    நியூயார்க்:

    பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

    அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

    350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. 

    இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×