என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷிய அதிபர் புதின் என்னை கொல்ல முயற்சி - மாடல் அழகி புகார்
Byமாலை மலர்20 Sep 2018 9:47 AM GMT (Updated: 20 Sep 2018 9:47 AM GMT)
இங்கிலாந்துக்கு நான் உளவு பார்ப்பதாக கருதி என்னை ரஷிய அதிபர் புதின் கொல்ல முயற்சி செய்கிறார் என்று மாடல் அழகி அன்னசபிரோ புகார் கூறி உள்ளார். #AnnaShapiro #Putin
லண்டன்:
இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்ஜி கிரிபால், அவரது மகள் ஆகியோரை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் மூலம் கொல்ல முயற்சி நடந்தது.
இவர்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்டதால் ரஷியாவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த மாடல் அழகி அன்னசபிரோ, அவரது கணவர் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள சலீஸ்பரி நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்கள் உணவில் எலி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சைக்கு பின் இருவரும் குணமடைந்தனர்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தன்னை கொல்ல முயற்சித்து இருப்பதாக அன்னசபிரோ புகார் கூறி இருக்கிறார். அவருடைய ஆட்கள் தான் உணவில் விஷத்தை கலந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, எனக்கு இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நபர்கள், பணக்காரர்கள் பலரை தெரியும். இதனால் இங்கிலாந்துக்கு நான் உளவு பார்ப்பதாக கருதி என்னை ரஷிய அதிபர் புதின் கொல்ல உத்தரவிட்டு இருக்கிறார் என்று கூறினார்.
ஆனால், இதை இங்கிலாந்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாக அவர்கள் கூறினார்கள். #AnnaShapiro #Putin
இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்ஜி கிரிபால், அவரது மகள் ஆகியோரை நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் மூலம் கொல்ல முயற்சி நடந்தது.
இவர்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்டதால் ரஷியாவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த மாடல் அழகி அன்னசபிரோ, அவரது கணவர் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள சலீஸ்பரி நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்கள் உணவில் எலி மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சைக்கு பின் இருவரும் குணமடைந்தனர்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தன்னை கொல்ல முயற்சித்து இருப்பதாக அன்னசபிரோ புகார் கூறி இருக்கிறார். அவருடைய ஆட்கள் தான் உணவில் விஷத்தை கலந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, எனக்கு இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நபர்கள், பணக்காரர்கள் பலரை தெரியும். இதனால் இங்கிலாந்துக்கு நான் உளவு பார்ப்பதாக கருதி என்னை ரஷிய அதிபர் புதின் கொல்ல உத்தரவிட்டு இருக்கிறார் என்று கூறினார்.
ஆனால், இதை இங்கிலாந்து போலீசார் உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து விசாரித்து வருவதாக அவர்கள் கூறினார்கள். #AnnaShapiro #Putin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X