என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்ற ரோமானியா துணை பிரதமர்
Byமாலை மலர்18 Sep 2018 10:40 PM GMT (Updated: 18 Sep 2018 10:40 PM GMT)
அரசு முறை பயணமாக ரோமானியா சென்றடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அந்நாட்டு துணை பிரதமர் அனா பிர்ச்சல் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்றார். #VenkaiahNaidu #VicePrimeMinisterofRomania #Ana Birchall
பசாரெஸ்ட் :
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.
பின்னர் வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனது பயணத்திட்ட நாடுகளில் இரண்டாவதாக மால்டாவுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தனது பயணத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாடான ரோமானியாவிற்கு சென்றடைந்தார். தலைநகர் பசாரெஸ்ட் விமான நிலையத்தில் ரோமானியா துணை பிரதமர் அனா பிர்ச்சல், இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வெங்கையா நாயுடுவை வரவேற்றார். #VenkaiahNaidu #VicePrimeMinisterofRomania #Ana Birchall
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.
பின்னர் வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தனது பயணத்திட்ட நாடுகளில் இரண்டாவதாக மால்டாவுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார். அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், தனது பயணத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாடான ரோமானியாவிற்கு சென்றடைந்தார். தலைநகர் பசாரெஸ்ட் விமான நிலையத்தில் ரோமானியா துணை பிரதமர் அனா பிர்ச்சல், இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வெங்கையா நாயுடுவை வரவேற்றார். #VenkaiahNaidu #VicePrimeMinisterofRomania #Ana Birchall
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X