என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
Byமாலை மலர்17 Sep 2018 6:37 PM GMT (Updated: 17 Sep 2018 6:37 PM GMT)
அமெரிக்காவில் உள்ள கரோலினாவில் புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. #HurricaneFlorence
வாஷிங்டன்:
அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான புளோரன்ஸ் என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது.
வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது. மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கடும் மழை பெய்ததால் வடக்கு கரோலினாவில் உள்ள 2 ஆறுகளின் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் ரோடுகளில் 10 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் தேங்கியது. தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்தது. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. புயல் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் வடக்கு கரோலினாவில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தெற்கு கரோலினாவில் புயல் பாதிப்பில் சிக்கி 6 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #HurricaneFlorence
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X