search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மால்டா அதிபருடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு
    X

    மால்டா அதிபருடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு

    ஒரு வாரம் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மால்டா நாட்டின் அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    வல்லெட்டா:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

    இதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    இந்நிலையில், தனது பயணத்திட்ட நாடுகளில் ஒன்றான மால்டாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றடைந்தார். அரசு மரியாதையுடன் வரவேற்பு பெற்ற ஜனாதிபதி பின்னர் அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோ ப்ரெகாவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் மற்றும் பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. #VenkaiahNaidu #MaltaPresident #MarieLouiseColeiroPreca
    Next Story
    ×