என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செர்பியா அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு
Byமாலை மலர்15 Sep 2018 10:08 AM GMT (Updated: 15 Sep 2018 10:17 AM GMT)
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியா அதிபரை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu
பெல்கிரேட் :
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உணவு உற்பத்தி, விவசாயம், மருந்துகள், பதுகாப்புத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார். #VenkaiahNaidu
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்றடைந்த அவருக்கு தலைநகர் பெல்கிரேடில் உள்ள செர்பியா மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செர்பியா மற்றும் இந்திய உயர்அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், உணவு உற்பத்தி, விவசாயம், மருந்துகள், பதுகாப்புத்துறை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். பின்னர், வெங்கையா நாயுடு மற்றும் செர்பியா அதிபர் அலக்சாண்டர் வூசிக் இடையே தனியாக சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ராவேஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்தார். #VenkaiahNaidu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X