என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் 6 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்13 Sep 2018 7:39 AM GMT (Updated: 13 Sep 2018 7:39 AM GMT)
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண் ஒருவர் 6 பேரை சுட்டுக்கொன்றது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #California #shotdead
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பேக்கர்ஸ் பீல்டு என்ற இடம் உள்ளது.
இந்த ஊரை சேர்ந்த கணவன்- மனைவி வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.
ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆண் திடீரென எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர் தனது மனைவியையும் கொன்றார்.
பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்த 2 பேரை சுட்டு கொன்றார்.
அப்போது அங்கே ஒரு கார் வந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். அந்த காரை அவர் கடத்தி சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் வந்த ஒருவரை சுட்டு கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். இதோடு அந்த நபருடன் சேர்த்து 6 பேர் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் ஏன் நடந்தது? ஏன் அவர் இத்தனை பேரை சுட்டு கொன்றார் என்று தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
6 பேர் கொலையும் சில வினாடிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #California #shotdead
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பேக்கர்ஸ் பீல்டு என்ற இடம் உள்ளது.
இந்த ஊரை சேர்ந்த கணவன்- மனைவி வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.
ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த ஆண் திடீரென எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர் தனது மனைவியையும் கொன்றார்.
பிறகு அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்த 2 பேரை சுட்டு கொன்றார்.
அப்போது அங்கே ஒரு கார் வந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். அந்த காரை அவர் கடத்தி சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் வந்த ஒருவரை சுட்டு கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தார். இதோடு அந்த நபருடன் சேர்த்து 6 பேர் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவம் ஏன் நடந்தது? ஏன் அவர் இத்தனை பேரை சுட்டு கொன்றார் என்று தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
6 பேர் கொலையும் சில வினாடிகளில் நடந்தது குறிப்பிடத்தக்கது. #California #shotdead
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X