search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாக்.முன்னாள் பிரதமரின் மனைவி குல்சும் நவாஸ் மரணம் - பரோலில் வருவாரா நவாஸ் ஷரிப்?
    X

    பாக்.முன்னாள் பிரதமரின் மனைவி குல்சும் நவாஸ் மரணம் - பரோலில் வருவாரா நவாஸ் ஷரிப்?

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். #NawazSharif #KulsumNawaz
    லண்டன்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.



    இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #NawazSharif #KulsumNawaz 
    Next Story
    ×