search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் நடக்கும் பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியை புறக்கணித்தது நேபாளம்
    X

    இந்தியாவில் நடக்கும் பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியை புறக்கணித்தது நேபாளம்

    வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள 'பிம்ஸ்டெக்’ நாடுகளின் கூட்டுப் போர் பயிற்சியில் நேபாளம் நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #BIMSTECmilitarydrill
    காத்மாண்டு:

    வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் கடந்த மாதம் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது, இந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.


    அதன் அடிப்படையில், முதன்முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நாளை தொடங்கும் ராணுவ போர் பயிற்சியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த போர் பயிற்சியில் பங்கேற்க வேண்டாம் என தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நேற்று திடீரென்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, கூட்டுப் போர் பயிற்சியில் நேபாள ராணுவத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தின் இந்த திடீர் நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை. #Nepalwithdraws #BIMSTECmilitarydrill #bimstecsummit 
    Next Story
    ×