search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகோபார் தீவில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
    X

    நிகோபார் தீவில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

    நிகோபர் தீவில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது என புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake
    ஜகார்த்தா:

    வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று மதியம் 1.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவானது. 

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×