search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கான் பதவி ஏற்வு விழா- சித்து, கபில்தேவுக்கு அழைப்பிதழ்
    X

    இம்ரான் கான் பதவி ஏற்வு விழா- சித்து, கபில்தேவுக்கு அழைப்பிதழ்

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    Next Story
    ×