search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் நாட்டோ படைவீரர்கள் 3 பேர் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் நாட்டோ படைவீரர்கள் 3 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டின் நாட்டோ படையை குறிவைத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். #SuicideBomberAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பர்வான் மாகாணம் அமைந்துள்ளது. இதன் தலைநகர் சாரிகரில் உள்ள கலாசய் பகுதியில் வெளிநாட்டின் நாட்டோ படையினரை குறிவைத்து தற்கொலைப் படையினர்  இன்று திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும், நாட்டோ படையை சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் மற்றும் இரண்டு ஆப்கானிஸ்தான் படைவீரர்கள் என மொத்தம் 3 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×