search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் - டாப் ஆர்டர் சொதப்பியதால் மீண்டும் தனி ஒருவனாக கோலி போராட்டம்
    X

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் - டாப் ஆர்டர் சொதப்பியதால் மீண்டும் தனி ஒருவனாக கோலி போராட்டம்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, கோலி நிதானமாக விளையாடி வருகிறார். #ENGvIND #EdgbastonTest #ViratKohli

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய பவுலர்கள் நேர்த்தியாக பந்து வீச இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட 193 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

    இந்திய அணியின் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 6 ரன்களிலும், ஷிகர் தவான் 13 ரன்களிலும் பிராட் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் 13 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஹானே 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறார். தற்போது வரை 26 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்துள்ளது. கோலி 34 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    வெற்றிக்கு இன்னும் 111 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா போராடி வருகிறது. முதல் இன்னிங்கில் கோலி 149 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×