என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் உள்பட 3 பேரை கடத்தி கொன்ற பயங்கரவாதிகள்
Byமாலை மலர்2 Aug 2018 9:23 AM GMT
ஆப்கானிஸ்தானில் இந்தியர் உள்ளிட்ட 3 வெளிநாட்டவர்களை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack
காபூல்:
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் சர்வதேச உணவு மற்றும் கேட்டரிங் சேவை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாசிடோனியாவைச் சேர்ந்த ஒருவர் என 3 தொழிலாளர்களை இன்று திடீரென காணவில்லை.
கம்பெனி நிர்வாகிகளும் போலீசாரும் தேடி வந்த நிலையில் மூன்று பேரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அருகில் அவர்களின் அடையாள அட்டைகளும் கிடந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதற்காக கம்பெனிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று பேரும் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த படுகொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் சர்வதேச உணவு மற்றும் கேட்டரிங் சேவை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாசிடோனியாவைச் சேர்ந்த ஒருவர் என 3 தொழிலாளர்களை இன்று திடீரென காணவில்லை.
கம்பெனி நிர்வாகிகளும் போலீசாரும் தேடி வந்த நிலையில் மூன்று பேரும் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு அருகில் அவர்களின் அடையாள அட்டைகளும் கிடந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதற்காக கம்பெனிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று பேரும் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த படுகொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. #IndianAbducted #Afghanistan #AfghanTerroristAttack
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X