search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் ஜோடியின் பாஸ்போர்ட் பறிமுதல்
    X

    இலங்கை சுங்க அதிகாரிகளை தாக்கிய குவைத் ஜோடியின் பாஸ்போர்ட் பறிமுதல்

    சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நாயை தடுத்த சுங்க அதிகரிகளை தாக்கிய வழக்கில் குவைத் நாட்டை சேர்ந்த ஜோடியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை கோர்ட் தடை விதித்துள்ளது.
    கொழும்பு:

    குவைத்தை சேர்ந்த ஜோடி தங்களது நாயுடன் கொழும்பு வந்து இறங்கியுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறும் போது சுங்க அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் 5 அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை ஜாமினில் விடுவித்த மாவட்ட கோர்ட், இருவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து உத்தரவிட்டது. இருவரும் தனித்தனியாக தங்கள் மீதான விசாரணையை சந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். 
    Next Story
    ×