
ஈராக்கில் ஹைதர் அல் அபாடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் அதிக அளவில் மின்தடை ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மின்துறை ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்து பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது மின்சாரத்துறை மந்திரியான காசிம் அல் பக்தாவியை முறையாக பணி செய்யாதது மற்றும் ஊழல் காரணங்களுக்காக அதிரடியாக நீக்கம் செய்து பிரதமர் ஹைதர் அல் அபாடி உத்தரவிட்டுள்ளார். #IraqPM #HaideralAbadi