என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் பேருந்து விபத்தில் 7 பேர் பலி
Byமாலை மலர்27 July 2018 1:22 PM GMT (Updated: 27 July 2018 1:22 PM GMT)
நேபாள நாட்டில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #BusAccident
காத்மாண்டு:
நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.
பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் இந்தியர் உட்பட 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #BusAccident
நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தனர்.
பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் இந்தியர் உட்பட 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #BusAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X