என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் சுற்றுலாத்தளத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் பலி
Byமாலை மலர்20 July 2018 2:24 PM GMT (Updated: 20 July 2018 2:24 PM GMT)
அமெரிக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பிரான்சன் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #US #BoatAccident
நியூயார்க்:
அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் பிரான்சன். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் செல்லும் அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள ஏரியில் டக் படகு எனப்படும் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய படகு மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில், டக் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஏரியில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேர் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு சவாரியின் போது திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த டக் படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #US #BoatAccident
அமெரிக்காவின் மிசவ்ரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் பிரான்சன். குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் குடும்பத்துடன் செல்லும் அழகிய இடங்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள ஏரியில் டக் படகு எனப்படும் தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய படகு மூலம் சவாரி செய்வது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில், டக் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு ஏரியில் மூழ்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14 பேர் விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு சவாரியின் போது திடீரென அதிகப்படியான காற்று வீசியதால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், மீட்கப்பட்டவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த டக் படகு சவாரியில் இதற்கு முன்னதாக 2 முறை விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #US #BoatAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X