search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு
    X

    தென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு

    தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி, விழுந்து, தீபிடித்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
    சியோல்:

    தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான போஹாங் நகரில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் பழுதுபார்ப்புக்கு பின்னர் இன்று சோதனை ஓட்டம் மற்றும் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

    சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென்று தரையில் மோதி, வெடித்து தீப்பிழம்பாக மாறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒரு வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உள்நாட்டு தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? என்பது தொடர்பான விசாரணைக்கு தென்கொரியா ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #SKorea #SKoreamilitaryhelicoptercrash
    Next Story
    ×