search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அடுத்த வாரம் டிஸ்சார்ஜ்
    X

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அடுத்த வாரம் டிஸ்சார்ஜ்

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட கால்பந்தாட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் அடுத்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் வீடியோவை தாய்லாந்து அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் நோட், ‘நான் நன்கு உடல் நலம் தேறி வருகிறேன் என்னை மீட்ட மீட்புக் குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்திருந்ததும் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில், சிறுவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வியாழன் அன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×