என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்காவில் புல்வெளியில் விழுந்து நொறுங்கியது விமானம்- 19 பேர் காயம்
Byமாலை மலர்10 July 2018 4:26 PM GMT (Updated: 10 July 2018 4:26 PM GMT)
தென் ஆப்பிரிக்காவில் விமானம் புல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்தனர். #WonderboomCrash #PlaneCrash
பிரிடோரியா:
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பயணிகளை ஏற்றி வந்த சிறுரக விமானம், ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் விமானி ஈடுபட்டார். எனினும் விமானம் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
மிதமான வேகத்தில் தரையில் விழுந்ததால் விமானத்தின் என்ஜின் பகுதி மற்றும் வால் பகுதி நொறுங்கியது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #WonderboomCrash #PlaneCrash #saplanecrash
தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் பயணிகளை ஏற்றி வந்த சிறுரக விமானம், ஒண்டர்பூம் விமான நிலையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் விமானி ஈடுபட்டார். எனினும் விமானம் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
மிதமான வேகத்தில் தரையில் விழுந்ததால் விமானத்தின் என்ஜின் பகுதி மற்றும் வால் பகுதி நொறுங்கியது. விமானத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. #WonderboomCrash #PlaneCrash #saplanecrash
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X