என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்
Byமாலை மலர்20 Jun 2018 6:26 AM GMT (Updated: 20 Jun 2018 6:26 AM GMT)
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டிற்குத் தெரியாமல் தன் தம்பியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவை சேர்ந்த பெண் டெப்பி ஷுடாந்த் (50). இவரது தம்பி ஜோ (37). இவர்கள் 2 பேரும் 15 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தங்கள் ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள் சமீபத்தில் தான் உண்மையை கூறினர்.
இதுகுறித்து டெப்பி கூறும் போது, ‘‘நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். அப்போது எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 2003-ம் ஆண்டு கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தேன்.
அப்போது உனக்கு ‘ஜோ’ என்ற தம்பி இருக்கிறான் என எனது பெற்றோர் கூறினார்கள். அவனை முதலாவதாக சந்தித்த போது எனக்கு வயது 35, அவனுக்கு 23. அவனை பார்த்ததும் எனக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.
அதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால் நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம். எங்கள் இருவரது உடம்பிலும் ஒரே ரத்தம் ஓடுகிறது என்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால் எங்களுக்குள் அக்காள்-தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை’’ என்றார். #Tamilnews
அமெரிக்காவை சேர்ந்த பெண் டெப்பி ஷுடாந்த் (50). இவரது தம்பி ஜோ (37). இவர்கள் 2 பேரும் 15 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தங்கள் ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள் சமீபத்தில் தான் உண்மையை கூறினர்.
இதுகுறித்து டெப்பி கூறும் போது, ‘‘நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். அப்போது எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். 2003-ம் ஆண்டு கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தேன்.
அப்போது உனக்கு ‘ஜோ’ என்ற தம்பி இருக்கிறான் என எனது பெற்றோர் கூறினார்கள். அவனை முதலாவதாக சந்தித்த போது எனக்கு வயது 35, அவனுக்கு 23. அவனை பார்த்ததும் எனக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.
அதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால் நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம். எங்கள் இருவரது உடம்பிலும் ஒரே ரத்தம் ஓடுகிறது என்றாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால் எங்களுக்குள் அக்காள்-தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை’’ என்றார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X