search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் - மைத்திரிபால சிறிசேனா
    X

    விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் - மைத்திரிபால சிறிசேனா

    விடுதலை புலிகளை முறியடித்துவிட்டாலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவர்களின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #MaithripalaSirisena #Eelam #LTTE
    கொழும்பு :

    இலங்கை உள்நாட்டு போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களின்  ஒன்பதாவது நினைவு தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, விடுதலை புலிகள் அமைப்பை நாம் வீழ்த்தி விட்டோம். ஆனால் அவர்களின் சித்தாந்தம் இன்னும் சாகவில்லை. வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

    அவர்களின் ஒரே நோக்கம் தனி ஈழம் அமைப்பதே, அதுவே அவர்களின் கனவு. மேலும், விடுதலைப் புலிகளின் ஆதரவளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார்கள். எனவே, விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரும் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் நேற்று முன்தினம் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற இறுதிப்போரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மே 18-ம் தினம் தமிழ் இன அழிப்பு தினமாக அவர் பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MaithripalaSirisena #Eelam #LTTE  
    Next Story
    ×