search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவாஸ் ஷரிப் மீதான புதிய குற்றச்சாட்டுக்கு உலக வங்கி மறுப்பு
    X

    நவாஸ் ஷரிப் மீதான புதிய குற்றச்சாட்டுக்கு உலக வங்கி மறுப்பு

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக வெளியான புதிய குற்றச்சாட்டை உலக வங்கி மறுத்துள்ளது. #WorldBank #NawazSharif
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். அவருக்கு எதிராக மூன்று ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நவாஸ் ஷரிப் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இவ்விவகாரம், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஆதாரத்துடன் மேற்கோள் காட்டியுள்ளன. இந்த தொகை இந்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு கைமாறிய பிறகு இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாக உயர்ந்ததாகவும், பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்துப் போனதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

    இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தனியாக புதிய விசாரணைக்கு பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் இந்தியாவுக்கு கள்ளத்தனமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக வெளியான புதிய குற்றச்சாட்டை உலக வங்கி இன்று மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலக வங்கியின் அறிக்கை என்று கூறி நேற்று முதல் வெளியாகிவரும் செய்திகள் சரியானவை அல்ல.

    உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எந்த தனிநபரின் பெயரைப் பற்றியும் எங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WorldBank #NawazSharif

    Next Story
    ×