என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூர் இந்து கோவிலில் பண மோசடி - நிர்வாகிகள் 2 பேர் இடை நீக்கம்
Byமாலை மலர்1 May 2018 12:56 AM GMT (Updated: 1 May 2018 12:56 AM GMT)
சிங்கப்பூர் இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் பண மோசடி செய்தது தொடர்பாக நிர்வாகிகள் இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ‘லிட்டில் இந்தியா’ என்னும் பகுதியில் உள்ள செராங்கூன் சாலையில் இந்தியர்களால் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. 1988-ம் ஆண்டு அறக்கட்டளை நிர்வாக அந்தஸ்தை பெற்ற இந்த கோவிலில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்தது.
இது தொடர்பாக சிங்கப்பூர் கலாசார, சமூக, இளைஞர் நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கோவில் பணம் பெரும் அளவில் சுருட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக குழுத் தலைவர் செல்வராஜூ மற்றும் செயலாளர் குமார் ஆகிய இருவரும் கோவில் நிர்வாக பணிகளில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகின்றனர்” என்று கூறப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் ‘லிட்டில் இந்தியா’ என்னும் பகுதியில் உள்ள செராங்கூன் சாலையில் இந்தியர்களால் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. 1988-ம் ஆண்டு அறக்கட்டளை நிர்வாக அந்தஸ்தை பெற்ற இந்த கோவிலில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் கோவிலின் கணக்குகளை தணிக்கை செய்தது.
இது தொடர்பாக சிங்கப்பூர் கலாசார, சமூக, இளைஞர் நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், “இந்து கோவிலின் கணக்குகளை சிங்கப்பூர் அறக்கட்டளை ஆணையம் தணிக்கை செய்ததில் 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மற்றும் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கோவில் பணம் பெரும் அளவில் சுருட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக குழுத் தலைவர் செல்வராஜூ மற்றும் செயலாளர் குமார் ஆகிய இருவரும் கோவில் நிர்வாக பணிகளில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகின்றனர்” என்று கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X