என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியா எல்லையில் உள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா முடிவு
Byமாலை மலர்30 April 2018 11:47 AM GMT (Updated: 30 April 2018 11:47 AM GMT)
வளர்ந்துவரும் புதிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டு எல்லையில் அமைத்துள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா தீர்மானித்துள்ளது. #SouthKorea #propaganda #loudspeakers #NorthKoreanborder
சியோல்:
விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக, வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் தென்கொரியாமிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்து வந்தது.
இருநாடுகளுக்கு இடையிலான புதிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டு எல்லையில் அமைத்துள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா தீர்மானித்துள்ளது. நாளை முதல் எல்லைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவித்துள்ள தென்கொரியா ராணுவ செய்தி தொடர்பாளர் சோய் ஹியூன்-சூ இருதரப்பு ராணுவ நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கை முதல்படியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #SouthKorea #propaganda #loudspeakers #NorthKoreanborder
விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசும் உச்சி மாநாடு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இரு நாடுகளின் தலைவர்களின் இந்த திருப்புமுனை சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக, வடகொரியா-தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் தென்கொரியாமிகப்பெரிய ஒலிபெருக்கிகளை கட்டிவைத்து, வடகொரிய அதிபரின் அணுஆயுத மோகம் அந்நாட்டு மக்களை கடுமையான பொருளாதார சீர்குலைவில் நிறுத்திவிடும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்த ஒலிபெருக்கிகளின் மூலம் பிரசாரம் செய்து வந்தது.
இருநாடுகளுக்கு இடையிலான புதிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் வடகொரியா நாட்டு எல்லையில் அமைத்துள்ள எதிர்பிரசார ஸ்பீக்கர்களை அகற்ற தென்கொரியா தீர்மானித்துள்ளது. நாளை முதல் எல்லைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவித்துள்ள தென்கொரியா ராணுவ செய்தி தொடர்பாளர் சோய் ஹியூன்-சூ இருதரப்பு ராணுவ நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கை முதல்படியாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #SouthKorea #propaganda #loudspeakers #NorthKoreanborder
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X