என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீச்சல் குளத்தில் 9 நிமிடங்கள் மூழ்கியும் உயிர்பிழைத்த அமெரிக்க சிறுவன் - வீடியோ
Byமாலை மலர்26 April 2018 12:42 PM GMT (Updated: 26 April 2018 12:42 PM GMT)
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் தண்ணீருக்கு அடியில் சிக்கிவிட சுமார் 9 நிமிடங்கள் கழித்து அச்சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
நியூயார்க்:
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த சல்லடையில் சிறுவனின் கால் சிக்கிக் கொண்டது.
இதனால், அந்த சிறுவன் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. நண்பன் ஆபத்தில் இருப்பதை அறிந்த மற்ற சிறுவன் உதவிக்கு அங்குள்ள பெரியவர்களை அழைத்தான். ஆனால், சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இறுதியாக, 9 நிமிடம் கழித்து சிறுவனை நீருக்கடியில் இருந்து பாதுகாப்பு குழு வெளியேற்றியது. சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருந்த போது அங்கிருந்த ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வாய் வழியாக காற்றை அந்த சிறுவனுக்கு கொடுத்தபடி இருந்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மிர்டில் கடற்கரையோரம் அருகே அவிஸ்டா சொகுசு விடுதி உள்ளது. இங்கு, நீச்சல் குளத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீரை வெளியேற்றும் ஓட்டையில் இருந்த சல்லடையில் சிறுவனின் கால் சிக்கிக் கொண்டது.
இதனால், அந்த சிறுவன் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. நண்பன் ஆபத்தில் இருப்பதை அறிந்த மற்ற சிறுவன் உதவிக்கு அங்குள்ள பெரியவர்களை அழைத்தான். ஆனால், சிறுவனை காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இறுதியாக, 9 நிமிடம் கழித்து சிறுவனை நீருக்கடியில் இருந்து பாதுகாப்பு குழு வெளியேற்றியது. சிறுவன் தண்ணீரில் மூழ்கி இருந்த போது அங்கிருந்த ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு தனது வாய் வழியாக காற்றை அந்த சிறுவனுக்கு கொடுத்தபடி இருந்துள்ளார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X