என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா - ஜூன் 29ம் தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்24 April 2018 9:49 AM GMT (Updated: 24 April 2018 9:49 AM GMT)
அமெரிக்காவில் தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் வரும் ஜூன் 29-ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழ் விழா நடைபெற உள்ளது. #TamilFestival #USTamilSangams
வட அமெரிக்காவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் தமிழ் விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் 31-வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலம் பிரிஸ்கோ நகரில் வரும் ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், விஜிபி சந்தோசம், ஐசரி கணேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அமெரிக்க தமிழர்களுக்கு தமிழ் மொழியின் கலையை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அமைப்பாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயல்படுகிறது. உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 31-வது தமிழ் விழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
முதல் நாள் விழாவாக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இரண்டாவது நாள் வரவேற்பு மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் பங்குபெறும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள் இந்திய, தமிழக அரசியல், கலை, சமுதாய நலன் சார்ந்த விழா நடைபெறும்.
விழாவில் 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து அரசியல், கலை, மருத்துவம், தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொள்ளும் வகையில் பேரவை ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேள்நம்பி ஏற்பாடு செய்துள்ளார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் கா.ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், வழக்கறிஞர் அருள்மொழி, நடிகர் கார்த்திக், எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன், ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி, தொல்லியலாளர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #TamilFestival #USTamilSangams
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், விஜிபி சந்தோசம், ஐசரி கணேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
அமெரிக்க தமிழர்களுக்கு தமிழ் மொழியின் கலையை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அமைப்பாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயல்படுகிறது. உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் 31-வது தமிழ் விழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
முதல் நாள் விழாவாக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இரண்டாவது நாள் வரவேற்பு மற்றும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள் பங்குபெறும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள் இந்திய, தமிழக அரசியல், கலை, சமுதாய நலன் சார்ந்த விழா நடைபெறும்.
விழாவில் 5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து அரசியல், கலை, மருத்துவம், தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொள்ளும் வகையில் பேரவை ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேள்நம்பி ஏற்பாடு செய்துள்ளார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், பேராசிரியர் கா.ஞானசம்பந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், வழக்கறிஞர் அருள்மொழி, நடிகர் கார்த்திக், எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன், ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி, தொல்லியலாளர் அமர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #TamilFestival #USTamilSangams
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X