என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீனாவில் ஊழியர் இன்றி தானாக இயங்கும் வங்கி
ஷாங்காய்:
சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் ஹுயாங்பூ மாவட்டத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி தானாக இயங்கும் அரசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிக்கின்றன. மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் மென்பொருளுடன் கூடிய கம்ப்யூட்டர், ஹோலோகிராம் எந்திரம், பேசும் ரோபோக்கள், தொடு திரைகள் என இவை அனைத்தும் ஊழியர்களின் பணியை திறம்பட செய்கின்றன. பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் பில் போடுதல் போன்ற பணிகளையும் செய்கின்றன.
இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்குள்ள ரோபோ வாயிலில் வரவேற்கிறது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. அதன் பின்னர் வாடிக்கையாளரின் தேசிய அடையாள அட்டை, முக அடையாளங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின்னர் வங்கி பரிவர்த்தனை பணிகள் நடக்கிறது.
இந்த வங்கியில் தங்கம் விற்பனை, பண மாற்றம், ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த வங்கிக்கு பாதுகாவலர்களும், குறிப்பிட்ட பணிக்கு ஒரு சில ஊழியர்களும் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Chinabanking
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்