என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடுபாதையை விட்டு விலகிச்சென்ற விமானம் - காத்மண்டு விமானநிலையம் 12 மணிநேரம் முடங்கியது
Byமாலை மலர்20 April 2018 9:10 AM GMT (Updated: 20 April 2018 9:10 AM GMT)
நேபாளத்திலிருந்து மலேசியா செல்லும் மலிண்டோ ஏர்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காத்மண்டு:
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ ஏர்ஜெட் பயணிகள் விமானம் 135 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓடுபாதையிலிருந்து விலகி புற்தரைக்குள் சென்றது. இதனால் விமானத்தின் டயர் மண்ணிற்குள் மாட்டிக்கொண்டது. பிரச்சனை ஏற்பட்டதை தெரிந்து கொண்ட விமானி கடைசி நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்திற்கு வேறு எந்த சேதமும் ஏற்படாததால் விமான ஊழியர்கள் உட்பட 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விபத்து ஏற்பட்டதால் விமான நிலையம் 12 மணி நேரம் முடங்கியது. பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். சீரமைப்பு பணி முடிவடைந்த பின் விமான போக்குவரத்து இன்று காலை முதல் தொடங்கப்பட்டது. #kathmandu
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லும் மலிண்டோ ஏர்ஜெட் பயணிகள் விமானம் 135 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓடுபாதையிலிருந்து விலகி புற்தரைக்குள் சென்றது. இதனால் விமானத்தின் டயர் மண்ணிற்குள் மாட்டிக்கொண்டது. பிரச்சனை ஏற்பட்டதை தெரிந்து கொண்ட விமானி கடைசி நேரத்தில் விமானத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்திற்கு வேறு எந்த சேதமும் ஏற்படாததால் விமான ஊழியர்கள் உட்பட 139 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விபத்து ஏற்பட்டதால் விமான நிலையம் 12 மணி நேரம் முடங்கியது. பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். சீரமைப்பு பணி முடிவடைந்த பின் விமான போக்குவரத்து இன்று காலை முதல் தொடங்கப்பட்டது. #kathmandu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X