என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்19 April 2018 12:56 PM GMT (Updated: 19 April 2018 12:56 PM GMT)
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் உள்ள அம்மோனியா டேங்கை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது.
இந்நிலையில், அந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர் ஒருவர் இன்று ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க தொட்டியின் உள்ளே இறங்கினர். இதில் விஷவாயு தாக்கி அவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விஷவாயு தாக்கியதில் மயங்கி கிடந்த 10க்கு மேற்பட்டவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X