என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் - சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்19 April 2018 5:41 AM GMT (Updated: 19 April 2018 5:41 AM GMT)
பத்து வருடத்துக்கு முன்பு பூமியில் விழுந்த எரிநட்சத்திரத்தில் வைரக்கற்கள் இருந்ததை சூடான் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நியூயார்க்:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது.
ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதை சூடானில் இருக்கும் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரத்தின் உடல்பகுதி முழுவதும் சிறு சிறு வைரக்கற்கள் இருந்தன.
இந்த எரிநட்சத்திரம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்கலாம். எனவே இந்த எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவை தூய்மையான வைரக்கற்கள் என்றும் அதற்கு முன்பு இதுபோன்ற வைரத்தை பார்த்ததில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம். மேலும் நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவானபோது ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம். சரியாக சொல்ல வேண்டுமானால் பூமி உருவான அதே நாளில் இந்த எரிநட்சத்திரமும் தோன்றியிருக்கலாம் என்றும் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு எரி நட்சத்திரம் விழுந்தது. விண்வெளியில் நாசா அமைத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மையம் இதை கண்டுபிடித்தது.
ஆர்மஹாட்டா சிட்டா என அதற்கு பெயரிடப்பட்டது. ஆனால் அந்த நட்சத்திரம் பூமியை நெருங்குவதற்கு சில கி.மீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. பூமிக்குள் நுழைந்த அந்த நட்சத்திரம் சூடானில் இருக்கும் நுபியன் பாலைவனத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதை சூடானில் இருக்கும் கார்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். அப்போது ஆல்மஹாட்டா சிட்டா நட்சத்திரத்தின் உடல்பகுதி முழுவதும் சிறு சிறு வைரக்கற்கள் இருந்தன.
இந்த எரிநட்சத்திரம் வெடித்தபோது வைரம் உருவாக வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பே அதில் வைரம் இருந்திருக்கலாம். எனவே இந்த எரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவை தூய்மையான வைரக்கற்கள் என்றும் அதற்கு முன்பு இதுபோன்ற வைரத்தை பார்த்ததில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம். மேலும் நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவானபோது ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம். சரியாக சொல்ல வேண்டுமானால் பூமி உருவான அதே நாளில் இந்த எரிநட்சத்திரமும் தோன்றியிருக்கலாம் என்றும் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X