search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்
    X

    பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனிலும் தமிழர்கள் ‘கோ பேக் மோடி’ என கோஷங்களை எழுப்பினர்.
    லண்டன்:

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதும் போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலும் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

    இந்நிலையில், காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி பிரிட்டன் சென்றுள்ளார். லண்டன் நகரில் ஒன்று கூடிய தமிழர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #PMModi #TamilNews
    Next Story
    ×