என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் கைது
Byமாலை மலர்14 April 2018 10:31 PM GMT (Updated: 14 April 2018 10:31 PM GMT)
ஈராக்கில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாக்தாத்:
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார்.
ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில், நினிவே மாகாணத்தில் கால் பதித்து உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.நேற்று முன்தினம் அங்கு தால் அபார் நகரை அடுத்து உள்ள அபு மரியா கிராமத்தில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மொசூல் பகுதியில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கைது செய்யப்பட்டு உள்ள 6 ஐ.எஸ். பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் ஆவார்.
சமீபத்தில் மேற்கு மொசூல் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. #Tamilnews
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து வந்த ஈராக் நகரங்கள் அத்தனையும் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த நாட்டின் பிரதமர் ஹைதர் அல்அபாதி தெரிவித்தார்.
ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இந்த நிலையில், நினிவே மாகாணத்தில் கால் பதித்து உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.நேற்று முன்தினம் அங்கு தால் அபார் நகரை அடுத்து உள்ள அபு மரியா கிராமத்தில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மொசூல் பகுதியில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கைது செய்யப்பட்டு உள்ள 6 ஐ.எஸ். பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் ஆவார்.
சமீபத்தில் மேற்கு மொசூல் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X