என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் பயனாளிகளின் தகவல் கசிவு - அமெரிக்கா பாராளுமன்ற குழு விசாரணையில் மார்க் ஜுக்கர்பக் ஆஜர்
Byமாலை மலர்4 April 2018 1:26 PM GMT (Updated: 4 April 2018 1:26 PM GMT)
பல லட்சக்கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்த விவகாரத்தில் வரும் 11-ம் தேதி அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணையில் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.
வாஷிங்டன்:
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.
மேற்கண்ட தகவலை இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க பாராளுமன்ற விசாரணை குழுவினர், ’இணையதளங்களில் பதிவிடப்படும் தங்களைப்பற்றிய தகவல்கள் என்னவாகின்றன? என்னும் தகவல் பாதுகாப்பு அம்சம் தொடர்பாக அமெரிக்க மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த விசாரணை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த விசாரணையில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பர்க்-ம் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர். #FaceBook #TamilNews
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னர் வரும் 11-ம் தேதி பேஸ்புக் தலைமை செயல் இயக்குனர் மார்க் ஜுக்கர்பக் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.
மேற்கண்ட தகவலை இன்று வெளியிட்டுள்ள அமெரிக்க பாராளுமன்ற விசாரணை குழுவினர், ’இணையதளங்களில் பதிவிடப்படும் தங்களைப்பற்றிய தகவல்கள் என்னவாகின்றன? என்னும் தகவல் பாதுகாப்பு அம்சம் தொடர்பாக அமெரிக்க மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த விசாரணை ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும். இந்த விசாரணையில் ஆஜராக சம்மதம் தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பர்க்-ம் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர். #FaceBook #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X