search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிப்து நாட்டில் போலீஸ் உயரதிகாரியை குறிவைத்து தாக்குதல் - இருவர் பலி
    X

    எகிப்து நாட்டில் போலீஸ் உயரதிகாரியை குறிவைத்து தாக்குதல் - இருவர் பலி

    எகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர போலீஸ் உயரதிகாரியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். #bombingkills
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர பாதுகாப்புத்துறை உயரதிகாரியாகவும், போலீஸ் மேஜர் ஜெனரலுமான மொஸ்தபா அல்-நேம்ர் இன்று தனது பாதுக்காப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது சாலையோரம் நின்றிருந்த ஒரு காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும், கார் டிரைவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். 

    மேலும் 4 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இன்னும் இருநாட்களில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அலெக்ஸான்டிரியா நகர மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். #tamilnews  #bombingkills
    Next Story
    ×