என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டனை தொடர்ந்து ரஷியாவில் உள்ள தூதரை திரும்பப்பெற ஐரோப்பிய யூனியன் முடிவு
Byமாலை மலர்24 March 2018 9:13 AM GMT (Updated: 24 March 2018 9:13 AM GMT)
பிரிட்டன் - ரஷியா இடையே மோதல் போக்கு வலுத்துவரும் நிலையில் ரஷியாவில் உள்ள தூதரை திரும்பப்பெற ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது.
புருசெல்ஸ்:
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பிரிட்டனின் பக்கம் நின்ற நிலையில், ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் மாஸ்கோவில் உள்ள 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது.
கடந்த 20-ம் தேதி லண்டன் நகரில் இருந்து 23 தூதரக அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறினர். விமானம் மூலம் சுமார் 65 பேர் மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதேபோல், நேற்று (வெள்ளிக்கிழமை) மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளும் வெளியேறி தங்களது தாய்நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ பொது வாக்கெடுப்புக்கு முன்னர் பிரிட்டன் நாட்டை தங்களது அங்கமாக முன்னர் வைத்திருந்த ஐரோப்பிய யூனியனும் ரஷியாவில் உள்ள தூதரை திரும்பப்பெற தற்போது தீர்மானித்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக பிரிட்டன் பிரதமர் தெரசா மே எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் தூதரை திரும்பப்பெறும் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ‘பிரிட்டன் நாட்டின் சாலிஸ்பரி நகரில் நடைபெற்ற கொலை முயற்சி தொடர்பாக பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை வரவேற்கும் வகையில் ரஷியாவில் இருந்து தங்களது தூதரை திரும்பப்பெற ஐரோப்பிய யூனியன் நேற்றிரவு எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Tamilnews
ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் ரஷ்யாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் பிரிட்டனின் பக்கம் நின்ற நிலையில், ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் மாஸ்கோவில் உள்ள 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது.
கடந்த 20-ம் தேதி லண்டன் நகரில் இருந்து 23 தூதரக அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினருடன் வெளியேறினர். விமானம் மூலம் சுமார் 65 பேர் மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதேபோல், நேற்று (வெள்ளிக்கிழமை) மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகளும் வெளியேறி தங்களது தாய்நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ பொது வாக்கெடுப்புக்கு முன்னர் பிரிட்டன் நாட்டை தங்களது அங்கமாக முன்னர் வைத்திருந்த ஐரோப்பிய யூனியனும் ரஷியாவில் உள்ள தூதரை திரும்பப்பெற தற்போது தீர்மானித்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக பிரிட்டன் பிரதமர் தெரசா மே எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் தூதரை திரும்பப்பெறும் முடிவுக்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் ஒருமனதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ‘பிரிட்டன் நாட்டின் சாலிஸ்பரி நகரில் நடைபெற்ற கொலை முயற்சி தொடர்பாக பிரிட்டன் அரசின் நிலைப்பாட்டை வரவேற்கும் வகையில் ரஷியாவில் இருந்து தங்களது தூதரை திரும்பப்பெற ஐரோப்பிய யூனியன் நேற்றிரவு எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X