search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை
    X

    பிறந்த குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற பெண்ணுக்கு 8 ஆண்டு சிறை

    பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்த குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    பாரீஸ்:

    பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லவுசாட்ஸ் நகரை சேர்ந்த பெண் ரொமானா கேனெட் (37). இவர் கர்ப்பிணியாக இருந்த போது குளியலறை தொட்டியில் குழந்தை பெற்றார். அப்போது பிறக்கும் குழந்தைகளை தண்ணீரில், அமுக்கி கொலை செய்தார்.

    இது போன்று 5 குழந்தைகளை கொன்றார். குழந்தைகளின் உடல்களை பாலிதீன் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தையின் உடலை அவரது 2 மகள்கள் கண்டு பிடித்தனர். மீதி 3 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.

    அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. #Tamilnews
    Next Story
    ×