என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு - 11 பேர் பலி
Byமாலை மலர்19 March 2018 9:18 AM GMT (Updated: 19 March 2018 9:18 AM GMT)
சிரியாவில் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்ட ஆப்ரின் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று குண்டு வெடித்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். #Bombblast #Afrin
இஸ்தான்புல்:
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான குர்திஷ் போராளிகள் வசமுள்ள பகுதிகளை மீட்க அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்கள் குழுவும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்ரின் நகரை கைப்பற்ற அரசுப் படையுடன், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்தவர்களும் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக உச்சகட்டப் போர் நடத்தி வந்தனர்.
இதன் விளைவாக ஆப்ரின் நகரம் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் குர்திஷ் போராளிகள் வைத்திருந்த வெடிகுண்டு இன்று வெடித்து சிதறியது.
இதில், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்த 4 போராளிகள் மற்றும் அப்பகுதியில் வசித்த பொதுமக்களில் 7 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Bombblast #Afrin #tamilnews
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான குர்திஷ் போராளிகள் வசமுள்ள பகுதிகளை மீட்க அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்கள் குழுவும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்ரின் நகரை கைப்பற்ற அரசுப் படையுடன், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்தவர்களும் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக உச்சகட்டப் போர் நடத்தி வந்தனர்.
இதன் விளைவாக ஆப்ரின் நகரம் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் குர்திஷ் போராளிகள் வைத்திருந்த வெடிகுண்டு இன்று வெடித்து சிதறியது.
இதில், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்த 4 போராளிகள் மற்றும் அப்பகுதியில் வசித்த பொதுமக்களில் 7 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Bombblast #Afrin #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X