என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு
Byமாலை மலர்13 March 2018 5:46 PM GMT (Updated: 13 March 2018 5:46 PM GMT)
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஊர்வலம் ஒன்றில் இன்று பேச முற்பட்ட போது அவர் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ImranKhan #Shoethrown
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ராத் பகுதியில் இன்று நடந்த ஊர்வலம் ஒன்றில் இம்ரான் கான் கலந்து கொண்டார்.
ஊர்வலத்தின் இடையில் வாகனத்தில் இருந்து உரையாற்ற மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அலீம் கான் மீது பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை சீக்கிரமாக நிறுத்திக் கொண்டார்.
ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் லாகூரில் உள்ள ஒரு மதராசாவில் பேசிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷீ வீசப்பட்டது. அதேபோல சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி காஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #Shoethrown #tamilnews
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ராத் பகுதியில் இன்று நடந்த ஊர்வலம் ஒன்றில் இம்ரான் கான் கலந்து கொண்டார்.
ஊர்வலத்தின் இடையில் வாகனத்தில் இருந்து உரையாற்ற மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அலீம் கான் மீது பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை சீக்கிரமாக நிறுத்திக் கொண்டார்.
ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் லாகூரில் உள்ள ஒரு மதராசாவில் பேசிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷீ வீசப்பட்டது. அதேபோல சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி காஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #Shoethrown #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X