என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தலிபான் தலைவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.32 கோடி பரிசு- அமெரிக்கா அறிவிப்பு
Byமாலை மலர்9 March 2018 10:56 AM GMT (Updated: 9 March 2018 10:56 AM GMT)
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தலிபான் அமைப்பின் தலைவர் மவுலானா பஸ்லுல்லா பதுங்கியுள்ள இடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.32 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் மவுலானா பஸ்லுல்லா. இவர் பல பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தார். குறிப்பாக இவரது இயக்கத்தினர் 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளி மீது நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல பயங்கரவாத தாக்குதலுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் மவுலானா பஸ்லுல்லாவுக்கு சொந்தமான இடத்தை இலக்காக வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஸ்லுல்லா தப்பிவிட்டதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 21 தலிபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
இதையடுத்து, பஸ்லுல்லா பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல் கூறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் (ரூ.32.5 கோடி) பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் ஜமாத் உல் அஹ்ரர் அமை,பபின் அப்துல் வாலி, லஷ்கர் இ இஸ்லாம் தலைவர் மங்கள் பாக் ஆகியோரின் தலைக்கு 3 மில்லியன் டாலர் (ரூ.19.5 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு அதிகாரிகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் டெக்மினா ஜான்குவா சந்தித்து பேசிய நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. #tamilnews
பாகிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் மவுலானா பஸ்லுல்லா. இவர் பல பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தார். குறிப்பாக இவரது இயக்கத்தினர் 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளி மீது நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல பயங்கரவாத தாக்குதலுக்கு இவர் மூளையாக செயல்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் மவுலானா பஸ்லுல்லாவுக்கு சொந்தமான இடத்தை இலக்காக வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஸ்லுல்லா தப்பிவிட்டதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 21 தலிபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
இதையடுத்து, பஸ்லுல்லா பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல் கூறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் (ரூ.32.5 கோடி) பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் ஜமாத் உல் அஹ்ரர் அமை,பபின் அப்துல் வாலி, லஷ்கர் இ இஸ்லாம் தலைவர் மங்கள் பாக் ஆகியோரின் தலைக்கு 3 மில்லியன் டாலர் (ரூ.19.5 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு அதிகாரிகளை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் டெக்மினா ஜான்குவா சந்தித்து பேசிய நிலையில், அமெரிக்கா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X