என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாளத்தில் மார்ச் 13-ல் ஜனாதிபதி தேர்தல்
Byமாலை மலர்23 Feb 2018 4:11 PM GMT (Updated: 23 Feb 2018 4:11 PM GMT)
நேபாள நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற மார்ச் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Nepal #Presidentelection
காத்மண்டு:
நேபாள நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற மார்ச் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிந்தியா தேவி பந்தாரி கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற மார்ச் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற மார்ச் 7-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 13-ம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் தேதி, புதிய ஜனாதிபதி பதவிஏற்ற பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. #Nepal #Presidentelection #March13 #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X