search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி
    X

    ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி

    வங்காளதேசம் நாட்டில் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்த 4 பேர் மின்கம்பத்தின் மீது தலை மோதியதில் உயிரிழந்தனர். #bangladesh #trainroof
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் வடக்கு பகுதியில் தினஜ்பூர் நோக்கி சென்ற டுருடோஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிலர் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ரெயில் ராணிநகர் நிலையத்தை நெருங்கியபோது மின்சாரம் கடத்தும் கம்பத்தின் இடையில் ரெயில் புகுந்து சென்றது.

    அப்போது ரெயிலின் மேல்பகுதியில் அமர்ந்திருந்த ஆறுபேர் கம்பத்தின்மீது தலை மோதி கீழே விழுந்தனர். அவர்களில் ஜஹாங்கிர் ஆலம்(19), முனிர் ஹொசைன்(22), அமினுல் இஸ்லாம்(29), அபேல் மஹ்முத்(26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். 

    இதில் காயமடைந்த இருவர் ராஜ்சாஹி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #tamilnews #bangladesh #trainroof
    Next Story
    ×